இதோ எனது பெயிண்ட் புகைப்படம்

|


இது வரைந்தது சுமார் ரெண்டு வருடம் முன்பு இருக்கலாம் இப்போ தேடி தூசி தட்டி ஸ்கேன் பண்ணி உங்கள் பார்வைக்காக...

ஏய் கைய்ய வச்சிகிட்டு சும்மா இருடா..

|













புகை பட போட்டிக்கு மொக்கையாக

|

எனது மொபைலில் சிக்கிய ரெண்டு....

வலைபதிவர் சந்திப்பு எனது பார்வையில்.....

|
1.அபுதாபியில் இருந்து முதலில் வந்த தம்பி எனக்கு போன் செய்து வந்துவிட்டேன் என்று சொன்னதும் வெளியில் வந்து பாத்தால் நிறைய பேர் நிக்க இதுல தம்பி யாருன்னு தெரிஞ்சிக்க போன் எடுத்து ரிங் பண்ணுனா யாருமே பாக்கெட்டில் கையவிட்டு மொபைலை எடுக்க காணும் ரிங் எங்கயாவது அடிக்குதானு நெருங்கி நெருங்கி போறேன் ரிங் அடிக்குது ஆறடி உருவம் என்னைய பாத்து நமட்டு சிரிப்பு சிரிக்குது மொத ஆப்பு என்னக்கு

2.மணி 12:45 ஆயிட்டு இன்னும் துபாயில் இருந்து யாரும் வரலை தம்பி கிட்ட நீ இங்கயே இருய்யா நான் pray பண்ணிட்டு வந்துடுறேன் அப்படினு சொல்லிட்டு pray பண்ணி முடிச்சிட்டு தம்பிய தேடுனா தம்பிய காணும் போன் பண்ணி எங்க இருக்கிங்கனு கேட்டா எல்லாரும் வந்துட்டாங்க வெளியில் நிக்கிறோம் வாங்கனு சொன்னாரு எல்லாரும் ஹாய் ஐயம் சென்ஷி, ஐ’யம் லொடுக்கு, ஐ’யம் கோபி, ஐ’யம் குசும்பன்னு மாத்தி மாத்தி சொல்லுவாங்கணு தெரிஞ்சதுதான். அதுக்காக ரெண்டு சென்ஷி வந்ததுதான் கொஞ்சம் ஓவர் J

3. நேரா ஹோட்டலுக்கு அழைத்து போய் விட்டாச்சி சாப்பாடு வர லேட் அங்கயே முதல் மாநாடு ஆரம்பமானது நான் ஹோட்டல் மேனஜரிடம் பேச போகவேண்டி இருந்ததால் எனது மொபைல் ரெக்காடரை ஆன் செய்து டேபில் மீது வைத்து சென்றேன் இது யாருக்கு தெரியாது (பதிவு போட வசதியாக இருக்குமென்பதால் ஆப்படிக்கவென்று தப்பா நினைக்க கூடாது) இடைஇடையே வந்து பேசிவிட்டு சென்றேன்.

4.அய்யனாருக்கு கும்மி புடிக்காது என்றதும் அபிஅப்பா தேவ் எப்படி இருக்கிங்க போன கும்மியில் பாத்ததுனு பின்னுட்டம் போட்டது யாருனு கேட்கவும் அய்ஸ் கப்சிப்.

அடிக்கடி என்னைய பார்த்து கும்மி அடிப்பது பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் என்று எதுக்கு சொன்னாருனு கடைசி வரைக்கும் புரியல.. J

5.எனது பின்னுட்டங்களை ஏன் வெளியிடவில்லை என்று அய்யனாரிடம் கேட்டதற்கு நான் போட்ட எத்தனையோ பின்னுட்டத்தை தம்பி வெளியிடவில்லை என்று திசைதிருப்பியது.

6.சாப்பாடு முடிந்ததும் சென்ற இடம் பனிசறுக்கு மைதானம். யார் யாருக்கு சறுக்கு ஷு வேண்டும் என்று கேட்டதற்கு நான் எதோ ஐஸ்கிரிம் வேண்டுமா என்று கேட்டது போல் எல்லாரும் கைபுள்ளதனமா கைய்ய தூக்க சிரிச்சிகிட்டே எல்லாருக்கும் மாட்டிவிட்டாச்சி அதுக்கு பிறகு நடந்ததுதான் போன பதிவில் எல்லாருக்கும் தெரியுமே..

7.எல்லா games ம் ஏறி எலும்பை திருகி முறிக்கி கலக்கி முடிச்சதும் boating சென்றது. லியோ சுரெஷ் பக்கத்தில் உக்காந்துகிட்டு பெடலை போடாமல் என்னையவே மிதிக்கவிட்டது. (லியோ இருக்குயா உங்களுக்கு அடுத்த தடவை மாட்டாமலா போயிடுவீங்க..)பிறகு பிளான் படி zoo க்கு போக இருந்த சமயத்தில் குசும்பனின் சதியால் செல்லாமல் கைவிட்டது.

8.வலைபதிவர் வருகையை ஓட்டி எனது ரூமை கிளின் செய்து கொண்டது பேச்சிலர் ரூம் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்ன..? ரூமில் வைத்து இருந்த டேட்டாலை “சரக்குனு” நினைத்து குடிக்க பார்த்தது (யாருனு நீங்களா ஒத்துக்கங்க) சரக்கு வாங்கி வைப்பதாய் ஒரு ஐடியா இருந்தது டெல்பின் மற்றும் கண்மணி பதிவுகளை படிக்காமல் இருதிருந்தால் கண்டிப்பாக அதுவும் இடம் பெற்றிருக்கும்.!!!!

கேட்க விரும்பும் கேள்வி.:

1.வந்ததிலிருந்து கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் அமைதியாகவே (!!)இருந்தது ஏன் ?

2.நான் எட்டு போட்டுட்டேன் குசும்பா நீ எப்ப பனிசறுக்கில் எட்டு போடுவாய்..?

3.தனிமை விரும்பி அய்யனார் எதற்காக துனையை தேட வேண்டும்..?

4.தம்பியிடம் அதிகமாக பேசினால் அதையே பதிவாக போட்டு விடுவாரோ என்று எல்லாரும் பயந்தது ஏன்.??

அட்வைஸ் : புகை உடலுக்கு உயிருக்கு நாட்டுக்கு வீட்டுக்கு (எனக்கும்) கேடு (ஊதி தள்ளிட்டாங்க)


டிஸ்கி : இன்னும் நன்றாக செய்து இருக்கலாம் என்று இப்போது நினைப்பதாலும் சந்திப்பில் நானும் மனிதன் என்ற வகையில் குறைகள் ஏற்பட்டு இருப்பின் மன்னிக்க......

பனி சறுக்கிய வீடியோ..

|
பனி சறுக்கிய சிங்கங்கள் வீடியோ.. :)


யூ டியூப் வீடியோ 1


யூ டியூப் வீடியோ 2



கூகுள் வீடியோ 1


கூகுள் வீடியோ 2


யப்பா யாரவது எனக்கு ஜெலிஸெல் குடுங்கப்பா....:)


(வந்தவங்க யாரும் தப்பா எடுத்துகாதீங்க பதிவு போட்டு ரொம்ப நாளாகிவிட்டது அதான்)

குரங்காட்டிகள்.. (2) மங்கை அவர்களுக்கு சமர்ப்பணம்

|
மங்கை அவர்கள் இங்கே எழுதிய கட்டுரைக்கு ஆதரவாக
இந்த கவிதை நான் படித்தது 2003-ல் முடிந்த அளவு ஞாபக படுத்தி அப்படியே எழுதியிருக்கேன்.. எழுதியது யாருன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்...:)


பால் மணம் மாறா
பச்சை உதட்டில்
மாற்று மொழிஊட்டுகின்ற
போட்டி

பூக்களை பறித்து
பூகம்ப பயிற்சி
மேதை கனவில்
தொடரும் வதைகள்

அம்மாவை மம்மியென
அவசரமாய் அழைக்க
பத்து வட்டிக்கு
முழ்கும் மழலைகள்

கேட்காமலே வாங்கி கொடுக்கிறோம்
கொளுத்தும் கோடையில்
கழுத்தில் "டை"ய்யும்
காலில் "ஷு"வும்
இங்கில்லாந்து குளிரை
வாங்கி தருவது எப்படி..?

போலி கெளரவம்
கூட்டனி அமைக்க
கல்வி,கொள்ளையர்கள்
காலில் கிடக்கிறது....


தோள் வலி மிகுந்தும்
கண்ணீர் வடிப்பதும்
தினம் தினம் தொடர்கிறது....

பிஞ்சு வதையை
தடுக்கும் நினைவு
நெஞ்சுக்கு எங்கே வருகிறது...